வேதாகமம் மூன்று மொழிகளில் எழுதப்பட்டன. அவை:
1.எபிரேயம், 2.அரமேய மொழி, 3.கிரேக்க மொழி
பழைய ஏற்பாட்டில் பெரும்பகுதி எபி ரேய மொழியில் எழுதப்பட்டது. சில பகுதி கள்மட்டும் அரமேய மொழியில் எழுதப்பட்டன அவை:
1. எஸ்றா 4 முதல் 8 வரை உள்ள அதிகாரங்கள்.
2. தானியேல் 2 முதல் 7 வரை உள்ள அதிகாரங்கள்.
3. எரேமியா 10:11.
எபிரேயமொழி அழகிய சித்திர வடிவான மொழி. எபிரேயர்கள் சித்திரங்களாய் சிந்தித்தார்கள். எனவே பெயர்ச் சொற்கள் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்தன. அவர்கள் தெளிவாக, உவமை, உருவகங்களுடன் பேசினார்கள், ஒவ்வொன்றும் “ஜீவன்” உள்ளதாக துடிப்புள்ளதாகவும் கருதப்பட்டது. பால் வேறுபாடு காட்டாத பால் இம்மொழியில் இல்லை (Neuter). எபிரேய மொழியில் ஒரு கதையை நாடகமாக்குவது எளிது, தேவனுடைய மக்களாகிய இஸ்ரவேலரின் செயல்பாடுகளை வர்ணிக்க இம்மொழி மிகவும் ஏற்றது.
எபிரேய மொழி தனிப்பட்ட நபருக்குரிய மொழியாகும். இது இருதயத்திற்கும் உணர்ச்சிகளுக்கும் கிளர்ச்சியூட்டுவது; உள்ளத்துக்கு அல்ல.
எபிரேய மொழி பேசுகிறவர்கள் எபிரேயர்கள். எபிரேயர்களும் இஸ்ரவேலரும் ஒன்றே. இஸ்ரவேலரின் நாட்டில் எபிரேய மொழி இருந்தது. தேவன்தாம் நேசிக்கும் மக்களை இஸ்ரவேல் நாட்டில் தழைத்தோங்கச் செய்வார். அவர் சொல்லுவதைப் பாருங்கள்: “நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன். ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன்” (மல்கியா 1:2,3). தேவன் இஸ்ரவேல் தேசத்தை யாக்கோபுவுக்காக நேசித்திருக்கிறார்.
புதிய ஏற்பாடு முழுவதும் கிரேக்க மொழி யில் எழுதப்பட்டுள்ளது. கிரேக்க மொழி எபிரேய மொழியைக் காட்டிலும் முற்றிலும் வித்தியாசமானது. இது ஒரு அறிவுப்பூர்வமான மொழி! இது உள்ளத்துக்கும் பிரியமான மொழி; இருதயத்துக்கு அல்ல. கிரேக்க மொழியில் ஒரு காரியத்தை அறிவுபூர்வமாக்குவது எளிது; ஒரு கருத்தை எளிதாக வெளிப்படுத்தலாம். எனவே இறையியல் கருத்துக்களை கிரேக்க மொழியில் வெளிப்படுத்த முடியும். எபிரேய மொழியில் இல்லாத ஒரு மொழித் தெளிவு கிரேக்க மொழியில் உள்ளது.
எபிரேய மொழியைப் போலல்லாமல், கிரேக்க மொழி உலகமெங்கும் நாகரீகம் மிகுந்த நாடுகளில் புதிய ஏற்பாட்டு காலத்தில் பேசப்பட்டது.
கிறிஸ்துவின் நற்செய்தி உலகெங் கும் எல்லாத் தேசங்களுக்கும் பிரசங்கிக்கப்பட வேண்டும் (லூக்கா 24:47). எனவே இந்த நற்செய்தி கிரேக்க மொழியில் கூறப்பட வேண்டும் என்று தேவன் விரும்பினார். கிரேக்க மொழி இயற்கையாகவே எல்லோராலும் சாதாரணமாகப் பேசப்பட்ட மொழி. தெருவில் போகும் எல்லோரும் கிரேக்க மொழி பேசுவார்கள்.
புதிய ஏற்பாட்டில் உள்ள கொள்கைகள், நற்செய்தி, இவற்றை வெளிப்படுத்தவும் மற்றவர்களுக்குக் கூறவும் கிரேக்க மொழி மிகவும் வசதியாக இருந்தது.
வேதாகமம் ஏன் எழுதப்பட்டது?
வேதாகமம் எழுதிவைக்கப்பட்டி ருப் பதில் அநேக நன்மைகள் உண்டு.
1. முதலாவது தெளிவு
பேசுவதைக் காட்டிலும் எழுதுவது மிகவும் தெளிவாக ஒரு காரியத்தை பதிவு செய்ய உதவும்.
2. இரண்டாவதாக பரவச்செய்தல்
மனிதர்கள் இறந்துபோகிறார்கள். நினைவுகள் மறந்துபோக வாய்ப்புண்டு. ஆனால், தேவனுடைய சத்தியங்களையும், வார்த்தைகளையும் எழுதி வைத்திருந்தால் அவை எவ்வளவு காலத்துக்கும் அழியாமல் இருக்கும். நற்செய்திப் பணி யாளர்கள் தங்கள் ஊழியத்தின் மூலமாக ஆதாயப்படுத்தப்படும் புதிய விசுவாசிகளி டம் தேவனுடைய வார்த்தைகள் அடங் கிய வேதாகமத்தைக் கொடுக்கலாம். அவர்கள் அதைப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். தேவஊழியர்கள் வேதாகமத்தைக் கொடுத்துவிட்டு வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டாலும் புதிய விசுவாசிகள் அதைப்படித்து, ஆவியில் வளரவும், கள்ளப்போதனைகளை எதிர்த்து வெறுக்கவும் வாய்ப்பு உண்டாகும். உலகில் துன்பங்களால் ஆட்கள் இறந்துபோனாலும் வேதாகமம் அழியாமல் இருக்கும்.
வேதாகம நூல்களை எழுதிய ஆதி எழுத்தாளர்களை தேவன் அழைத்து, அபிஷேகம் பண்ணி, ஆசீர்வதித்து எழுதும்படி அகத்தூண்டுதல் கொடுத்து, ஆவியானவரின் நடத்துதல் எப்போதும் அவர்களுடன் இருக்கச்செய்தார். தேவன் கூறியதை, இயேசுவின் போதனைகளை அப்படியே தவறில்லாமல் எழுதும்படி அனுக்கிரகம் பண்ணினார்.
இதில் மிகவும் சிறப்பான அம்சம் என்னவென்றால், எழுதப்பட்ட வேதநூல்களில் தேவன் தம்மை வெளிப்படுத்தினார். கற்பனை செய்துபாருங்கள். தேவன் தமது உள்ளத்தில் இருப்பதை நமக்குத் தெரிவிக்கும் அளவுக்கு நம்மை நேசித்திருக்கிறார். இந்த 21ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் நாம் நம்பி, விசுவாசிப்பதற்கு ஏதாவது வேண்டும் என்று தேவன் அறிந்திருந்தார். இந்தக் கடைசிக்காலத்தில் தோன்றி இயங்கிக்கொண்டிருக்கும் இயக்கங்கள், ஊழியங்கள், ஊழியர்கள். பேச்சாளர்கள் இவர்களை நடுநிலையில் நின்று மதிப்பீடு செய்யத் தெரியவேண்டும், அதற்கு நமக்கு அறிவும், பயிற்சியும், திறமையும் வேண்டும்.
கர்த்தருடைய பரிசுத்த வேதாகமம் தான் நமக்குத் திட்டமான உரைகல், அவர் நம்மை நேசித்தபடியால் நம்மை யூகித்துக்கொண்டும், அனுமானித்துக்கொண்டும் இருக்கச் சொல்லவில்லை. நாம் அறியவேண்டிய அனைத்துக் காரியங்களையும் அவர் வேதாகமத்தில் எழுதச்செய்திருக்கிறார். நாம் தேவையானவற்றை அதிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்.